பிரபாகரன் தலைமையில் மீண்டும் தமிழ் ஈழப்போர் எழுச்சி பெறும்: திருமா

பிரபாகரன் தலைமையில் மீண்டும் தமிழ் ஈழப்போர் எழுச்சி பெறும் என்று தொல்.திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.

சி.பா.ஆதித்தனாரின் 28 வது நினைவு நாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சி.பா.ஆதித்தனார் 2 கனவுகளை கண்டார். இவற்றில் ஒன்று தமிழர் கால்வாய் ஆகும். இந்த தமிழர் கால்வாய்க்கு சேது சமுத்திர கால்வாய் என்று பெயர் சூட்டியவர் ஆதித்தனார் ஆவார்.

அவர் கண்ட சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் கருணாநிதி தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் குரல் கொடுப்பேன். சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற துணை நிற்பேன்.

சி.பா.ஆதித்தனார் கண்ட மற்றொரு கனவு தமிழ் ஈழம் ஆகும். சிங்கள வெறியர்களின் அடக்கு முறை, இன வெறி போன்ற காரணங்களால் தமிழ் ஈழப்போர் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், பிரபாகரன் தலைமையில் மீண்டும் தமிழ் ஈழப்போர் எழுச்சி பெறும். தமிழ் ஈழத்தை அடைந்தே தீருவோம். அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று உறுதியளிக்கிறேன் என்றார்

1 கருத்துகள்:

Thalaivar Thol.Thiruma Avargalain 28-05-2009 Andru nadantha Amathi Perani Pechukkal Super...

Prabhakaran Uirudan Erukkirar Eanbathu Aaruthal Tharugirathu...

Dr. L. Srinivasan,
General Seceratary
All India Valai Siddar Aanmeega Peravai,
Tiruvannamalai

29 மே, 2009 அன்று 1:51 AM comment-delete

கருத்துரையிடுக