13ஆம் நாளாக கையயாப்ப இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொல்.திருமாவளவன் கையயாப்பம் பெற்றார்!


இன்று (29Š07Š2011) காலை 10.30 மணியளவில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆவின் மையம் அருகே விடுதலைச் சிறுத்தைகளின் கையயாப்ப இயக்கம் சார்பில் 13ஆம் நாளாக கையயாப்பம் பெறும் நிகழ்ச்சி தொடங்கியது. கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்றப் பணியாளர்கள், சட்டக்கல்லுரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே துண்டறிக்கைகளை வழங்கி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கையயாப்பமிடுமாறு கேட்டுக்கொண்டார். ஏராளமான வழக்கறிஞர்களும், அரசுப் பணியாளர்களும் வரிசையில் அணிவகுத்து நின்று கையயாப்பமிட்டனர். வழக்குகளுக்காக நீதிமன்றம் வந்திருந்த பொதுமக்களும், ஆட்டோ ஓட்டுனர்களும், மாணவர்களும் இராஜபக்சேவை தண்டித்தே தீரவேண்டும் என்று வெளிப்படையாகச் சொல்லியவாறு கையயாப்பமிட்டனர். மூத்த வழக்கறிஞர் ஒருவர், தன்னை ஒரு காங்கிரஸ்காரர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, 1974லிருந்து ஈழத் தமிழருக்கு ஆதரவாக தான் செயல்பட்டு வருவதாகவும், ""காங்கிரஸ் கட்சியிலும் இனவுணர்வு உள்ளவர்கள் இருக்கிறோம் தம்பி!'' என்று மிகுந்த மகிழ்ச்சியோடு கூறிவிட்டு ராஜபக்சேவை கட்டாயம் தண்டிக்க வேண்டும் என்று சொன்னபடியே கையயாப்பமிட்டார். தி.மு.க., பா.ம.க. வழக்கறிஞர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் ஏராளமாகத் திரண்டு வந்து கையயாப்பமிட்டனர்.

நிகழ்ச்சியில் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ""விரைவில் கையயாப்ப இயக்கத்தை முடித்து அனைத்துப் படிவங்களையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க இருக்கிறோம். அதற்கென ஓர் அரங்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரை வரவழைத்து அவரின் மூலமாக ஐ.நா. பேரவைக்கு படிவங்களை அனுப்பவிருக்கிறோம். 10 லட்சம் பேரிடம் கையயாப்பம் பெறுவது எங்கள் இலக்கு. 15 இலட்சம் கையயாப்பம் பெறுவதற்கான அளவில் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 10 இலட்சத்திற்கும் மேலாக கையயாப்பங்களைப் பெறுவோம் என நம்புகிறோம்'' என்று கூறினார்.

கையயாப்ப இயக்கம் மாலை 5 மணி வரையில் தொடர்ந்து நடைபெறுகிறது.

இவண் 
வன்னிஅரசு 
மாநில செய்தித் தொடர்பாளர்





0 கருத்துகள்:

கருத்துரையிடுக