தொல்.திருமாவளவன் பொது மக்களிடம் கையொப்பம் பெற்றார்

இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கையொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது. இன்று 18.7.2011  மாலை 6 மணியளவில் திருவேலிக்கேணி ஐஸ் ஹவுஸ் சந்திப்பில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் பொது மக்களிடம் கையெழுத்து படிவத்தை கொடுத்து கையொப்பம் பெற்றார். தமிழ் நாடு முழுவதும் குறைந்தது (1500000)பதினைந்து லட்சம்பெறவேண்டும்  என்று விடுதலைச்சிறுத்தைகள் தீவிரமாகக் களப்பணியாற்றி வருகிறார்கள்.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக