வன்னிஅரசு விடுதலை

கடந்த 23-3-2012 அன்று கூடங்குளம் அணுஉலைக்கெதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாகக் கலந்துகொண்ட கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.


இந்நிலையில் சென்னை திரும்பிக்கொண்டிருந்த வன்னிஅரசு, இராஜபாளையம் அருகே க்யூ பிராஞ்ச் காவல்துறையினரால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.  



நேற்று அவருக்கு ஜாமின் வழங்கிய நிலையில், இன்று காலை திருச்சி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.  






அவரை கட்சியின் மாநில நிர்வாகிகள் ஏ.சி. பாவரசு, உஞ்சைஅரசன், தகடூர் தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், பார்வேந்தன், ப.பூவிழி, ஆதிரை, மாவட்ட நிர்வாகிகள் எல்லாளன், ஆ.விடுதலைச்செல்வன், இர.செந்தில், சிவகாசி இராசா, திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தமிழ்நாதன், அரசு மற்றும் ஏராளமானோர் சிறைவாயிலில் வரவேற்றனர். பின்னர் அருகிலிருந்த அம்பேத்கர் சிலைக்கு வன்னிஅரசு மாலை அணிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக