யாழ். மக்களை தொல்.திருமாவளவன் சந்திப்பதற்கு, இலங்கை இராணுவத்தினர் தடை

யாழ்ப்பாண மக்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு இலங்கை இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த தொல்.திருமாவளவன், யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து மக்களை சந்திப்பதற்கு இலங்கை இராணுவத்தினரிடம் அனுமதி கோரியிருந்தார்.

எனினும் பாதுகாப்புக் காரணங்களை முன்வைத்து அவரது கோரிக்கையை இலங்கை இராணுவத்தினர் நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நன்றி : தமிழ்வின்

-

0 கருத்துகள்:

கருத்துரையிடுக