“டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்” திரைப்படத்தை கட்சியின் நிர்வாகிகள் ஆங்காங்கே திரையரங்கம் அமர்த்தி மக்கள் இலவசமாகப் படத்தைப் பார்க்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்


விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சென்னை உதயம் திரைப்பட அரங்கில் உள்ள சந்திரன் திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட “டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்” படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்ப்பதற்கு முன் எழுச்சித் தமிழர் திருமாவளவன் கூறியது.

அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் “டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்” திரைப்படம் தலித் சமுதாயத்தினர் மட்டுமல்லாது பிற சமூகத்து மக்களும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படமாகும். இப்படத்திற்கு தமிழக அரசு 10 இலட்ச ரூபாய் மட்டுமே நிதி வழங்கியுள்ளது. தற்போது ஒரு சில திரையரங்குகளில் மட்டும் ஒரு காட்சி மட்டுமே திரையிடப்படுகிறது.

பொதுமக்கள் அனைவரும் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ஆங்காங்கே திரையரங்கம் அமர்த்தி மக்கள் இலவசமாகப் படத்தைப் பார்க்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் தங்கள் குடும்பத்துடன் “டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்” இலவசமாகப் பார்ப்பதற்லு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் எழுச்சித்தமிழர் கேட்டுக்கொண்டார்.

1 கருத்துகள்:

தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் தங்கள் குடும்பத்துடன் “டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்” இலவசமாகப் பார்ப்பதற்லு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் எழுச்சித்தமிழர் கேட்டுக்கொண்டார் - Annan avargal itharkku theevira muyarchi yedukka vendum.by - Anburaj (Pune)

10 டிசம்பர், 2010 அன்று 12:18 AM comment-delete

கருத்துரையிடுக