தமிழில் தேசிய கீதம் பாடத் தடை: இனவெறியன் இராஜபக்சேவுக்கு தொல்.திருமாவளவன் கண்டனம்!


இலங்கைத் தீவில் தமிழினமும் சிங்கள இனமும் இருபெரும் தேசிய இனங்களாக வாழ்ந்து வந்தாலும் சிங்கள இனத்திற்கு மூத்த இனமாக வாழ்ந்து வருவது தமிழினம்தான் என்பது வரலாற்று உண்மையாகும். எனினும், ஆங்கிலேயன் ஆட்சிக்குப் பிறகு சிங்களவன் கைகளில் ஆட்சியதிகாரம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதனால் ஒட்டுமொத்த இலங்கைத் தீவையே சிங்கள நாடு என அறிவிக்கும் வகையில் சிங்கள இனவெறியர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

அதன் விளைவாக, தமிழ்த்தேசிய இனம் தங்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், தாங்கள் அடர்த்தியாக வசிக்கும் வடக்குŠகிழக்குப் பகுதிகளை தங்களின் தாயகமாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ள அரசுரிமை வேண்டுமென்றும் கடந்த 50 ஆண்டுகளாக அறவழியிலும் ஆயுதவழியிலும் போராடி வருகின்றனர். இதனால் இலட்சக்கணக்கான தமிழர்கள் உயிரிழக்கவும், இலட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாய்ப் புலம்பெயரவும் வேண்டிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறான சூழலில் சிங்கள இனவெறியன் இராஜபக்சே, தமிழ் தேசிய கீதம் பாடுவதற்கு இலங்கைத் தீவில் அனுமதி இல்லை என்று அறிவிப்புச் செய்திருப்பதோடு, சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்வதாகவும், அதாவது இலங்கை சிங்களருக்கே உரியதாகவும் அறிவிப்புச் செய்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. ஒரு நாட்டில் இரு தேசிய கீதங்களா என்ற கேள்வியை எழுப்பும் இராஜபக்சே, ஒரே நாட்டில் இரு தேசிய இனங்கள் வாழும் வரலாற்று உண்மையை மூடி மறைக்க முயல்கிறார். சிங்களப் பேரினவாதிகளின் இந்த மேலாதிக்க வெறியைக் கண்டிக்கவும், தமிழினத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோவதைத் தடுக்கவும் இந்திய அரசு உள்ளிட்ட சர்வதேசச் சமூகம் முன்வரவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.

இராஜபக்சேவின் இனவாதŠபாசிசப் போக்குகளிலிருந்து தமிழினத்தையும் தமிழீழத்தையும் மீட்டெடுக்க தமிழ்நாட்டுத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்கள் யாவரும் ஒருங்கிணைந்து போராட உறுதியேற்போம்.


இவண்

 (தொல். திருமாவளவன்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக